களம்: தமிழ் சினிமாவின் கிராமத்து கதாநாயகி.
பொறி: கி. க.... யின் காவு வாங்கும் கண்கள்.
-:கவிதை:-
அடியே பெண்ணே,
அநியாயத்திற்கு
அழகாயிருக்கிறாய்!
ஐந்தரை அடிக்குள்
பயங்கர ஆயுதங்கள்
ஏந்தி-
அரைப்புடவையில்
தெருவெல்லாம்
தேரோட்டம்
செல்கிறாய்......
வெட்டியாய் இருந்த
வெட்டியானுக்கு
தினமும்
வேலை வைத்துவிட்டாய்.
உன்னைப்போய்
வெறும்
"பெண்" என்று
சொல்கிறார்கள்.
என்ன ஊருடா
சாமி?
வாலிப-
பயங்கரவாதிகளின்
பட்டியலில்
உன்னையல்லவா
முதலில்
வைக்கவேண்டும்.....
என்ன உலகம்டா
சாமி.........
1 comment:
மிக நன்று...
தொடர்ந்து எழுதவும் அதே கார்மான் குத்துடன் (பஞ்ச்...)
Post a Comment